நிமிஷங்கள் எல்லாம் நினைவுகளாய் மாறின...... வருஷங்கள் எல்லாம் வார்த்தைகளாய் மாறின...... இரு விழி பார்வைகள் கூட வாசலாய் மாறின...... ஆனால் உன் மனது மட்டும் என் காதலை ஏற்காதோ..... உன் நினைவுகள் அனைத்தும் நானாக மாறாதோ......
ஓர் இரவில்... உன் நினைவுகளோடு நிலவை பார்த்திருந்தேன். நிலவு கேட்டது " என்னை மறந்து எதை நினைக்கிறாய்....? " என்று. எப்படி சொல்வேன் " நான் என்னையும் மறந்து உன்னை நினைக்கிறன்.....! " என்று.
இரத்தம் கூட பாயாத பகுதியில் நீ எப்படி...? காற்று கூட பார்த்ததில்லை என்று கர்வம் கொண்டேனே அதில் உன் கால்தடம் எப்படி...? ஊசி நிற்கும் அளவு கூட வெற்றிடம் இல்லையே பின் உன் உருவம் எப்படி...? என் இதயத்தில்............! அந்த ரகசியத்தை சொல்லிவிடு.....!